Saturday, May 18, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பு

இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பு

வருடாந்திர தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லைரிட்ஸ் விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நிகழும் ஒரு சம்பவமாகும்.

இந்த விண்கல் மழை லைரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் விழும் எனவும் இது இன்று இரவு அல்லது நாளை காலை உச்சத்தில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விண்கல் மழையை காலை 4 – 5 மணிக்குள் வடக்கு திசையில் கண்ணால் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles