தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன ஒட்ட பந்தய போட்டியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் ஒன்று ஓட்ட பந்தயம் இடம்பெற்ற வீதியை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்றதை அடுத்த ஓட்ட பந்தய போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.