Wednesday, May 15, 2024
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுபெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை அணி

பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை அணி

நேற்று (17) நடந்த தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் லோரா வோல்வர்ட் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

ஒருநாள் போட்டி ஒன்றில் பெண்கள் கிரிக்கட் அணி கடந்து சென்ற அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

அதனடிப்படையில் இதற்கு முன்னர் நியுஸிலாந்து மகளிர் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா மகளிர் 6 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்கள் பெற்றிருந்த சாதனையை இலங்கை மகளிர் அணி முறியடித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் அடங்களாக 195 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.

இதேவேளை போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் சமரி அத்தபத்து பெற்றார்.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles