இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த நிலையில் 207 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சின் சார்பில் மதீஷ பத்திரன 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.