Saturday, June 14, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் கொலை

சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் கொலை

மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இந்தக் கொலையைச் செய்துள்ள நிலையில், ஹர்ஷன குமார என்ற 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார்.

குறித்த மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞன் தனது சித்தியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் இன்று (13) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles