Wednesday, April 23, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடுதியொன்றில் தங்கியிருந்த யுவதி திடீர் மரணம்

விடுதியொன்றில் தங்கியிருந்த யுவதி திடீர் மரணம்

அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யுவதி நேற்று (10) மாலை நபர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட விடுதியில் அறையொன்றை முன்பதிவு செய்துள்ளார்.

எனினும், அவர்கள் அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில், குறித்த நபர் யுவதி சுயநினைவின்றி இருப்பதாக விடுதி நிர்வாகத்துக்குத் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles