சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி இறைச்சி மற்றும் பழங்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும், மரக்கறி தட்டுப்பாடும் தற்சமயம் முற்றாக முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தின் கீழ் தேவைக்கு அதிகமான கோழி இறைச்சி, முட்டை, காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி இப்போது சந்தையில் கிடைக்கிறதென அவர் கூறினார்.
புத்தாண்டின் போது ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 5,000 ரூபாவாக அதிகரிக்குமென பலரும் கூறியதாகவும், ஆனால் தற்போது கரட்டின் விலை மட்டுமன்றி ஏனைய அனைத்து மரக்கறிகளின் விலைகளும் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மே மாதத்திற்குள் முட்டை ஒன்றின் விலை 30 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.