முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்திற்காக அவருடன் 9 பேர் கொண்ட குழுவொன்றும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி இன்று (09) நள்ளிரவு 12.55 மணியளவில் தாய் எயார்வேஸின் TG-308 விமானத்தில் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.