Sunday, May 19, 2024
26.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி

கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி

மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையம் (சிலிண்டர்) சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மலசலக்கூட குழிக்குள் இறக்குவதற்கு கொண்டுவரப்பட்டிருந்த கொங்கிரீட் வளைங்களில் ஒன்று மாணவன் சரிந்து விழுந்தில் குறித்த மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவர் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Keep exploring...

Related Articles