Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகை - கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மூதூர் – பஹ்ரியா நகர் கடற்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவரது வயிற்றுப் பகுதியில் மண் மூடையொன்றும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில், மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles