Thursday, May 8, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் அடித்து செல்லப்பட்ட நபர் மரணம்

நீரில் அடித்து செல்லப்பட்ட நபர் மரணம்

மட்டக்களப்பு – மாவடிஓடை ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய முஸ்தபா மகுமுது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று ஆற்றில் குளிக்கச்சென்றவேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஆற்றில் கற்பாறைகளுக்குள் அடைந்திருந்த நிலையில் இவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.

திடீர்மரண விசாரணையதிகாரி சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார்.

அதையடுத்து பிரேத பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles