Saturday, March 15, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேல் ஆசை காட்டி பணம் பறித்த வைத்தியர் கைது

இஸ்ரேல் ஆசை காட்டி பணம் பறித்த வைத்தியர் கைது

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த வைத்தியர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பணம் கொடுத்த நபரொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்புவதாகக் கூறி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தேக நபர் அழைத்துள்ளார்.

சந்தேகநபர் இவ்வாறு 9 பேரிடம் 7,650,000 ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles