Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டை விட்டு வெளியேறிய பெண் மயங்கி வீழ்ந்து மரணம்

வீட்டை விட்டு வெளியேறிய பெண் மயங்கி வீழ்ந்து மரணம்

கணவனும் மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய பெண், வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கை சேர்ந்த இராசரத்தினம் செல்வரதி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர் என மரண விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles