Sunday, August 24, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு படகுகளில் கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த 21 தமிழக கடற்தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர், கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, 21 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles