Monday, May 13, 2024
27 C
Colombo
செய்திகள்உலகம்படகு விபத்தில் 60 அகதிகள் உயிரிழப்பு

படகு விபத்தில் 60 அகதிகள் உயிரிழப்பு

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்திய தரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்தனா்.

இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த குறித்த படகிலிருந்து 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களில் ஏராளமான பெண்களும், ஒரு குழந்தையும் இருந்ததாக மீட்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.

மிகவும் ஆபத்தான அகதிகள் வழித்தடமான மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு மாத்திரம் சுமாா் 2,500 போ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்றும் (13) நாளையும் (14) கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்ற விவகாரக் குழு...

Keep exploring...

Related Articles