Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோள் மண்டலம் மீண்டும் திறப்பு

கோள் மண்டலம் மீண்டும் திறப்பு

பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம், மீண்டும் இன்று (13) முதல் திறக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் கலாநிதி உத்பலா அலஹகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் கீழுள்ள கோள் மண்டலத்தின் புரொஜெக்டர் (Projector) உபகரணங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோள் மண்டலம் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நேற்று (12) வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த புரொஜெக்டர்கள் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (13) புதன்கிழமை முதல் கோள் மண்டலத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் அவசியமான நடவடிக்கைகளை இலங்கை கோள் மண்டல ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles