Monday, May 13, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் - முச்சக்கர வண்டி மோதுண்டதில் 6 பேர் படுகாயம்

கார் – முச்சக்கர வண்டி மோதுண்டதில் 6 பேர் படுகாயம்

எஹெலியகொடை – பதுவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 6 பேர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து பலாங்கொடை பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles