Monday, May 20, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன்பிடிக்க சென்ற மூவர் படகுடன் மாயம்

மீன்பிடிக்க சென்ற மூவர் படகுடன் மாயம்

கல்பிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு மீண்டும் கரைக்கு வரவில்லை என கப்பலின் உரிமையாளர் கல்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தக் கப்பலில் ஈச்சங்காடு பிரதேசத்தில் வசிக்கும் மூன்று மீனவர்கள் பயணித்ததாகவும் அவர்கள் 21, 37 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மீன்பிடி கப்பலை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Keep exploring...

Related Articles