யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு ‘வான் சாகசம் – 2024’ கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இதன்போது சாகசத்தில் ஈடுபட்ட ஒருவர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானப்படை சாகச வீரருக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.