கொழும்பு – குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் நேற்று (05) இரவு கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
குருணாகலிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 04 பேர் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.