கொழும்பு – பதுளை பிரதான வீதியில் எல்லபொல பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த லொறி சாரதி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பலாங்கொடை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.