ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி,மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகங்கள் என அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பெயரிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (03) வெளியிடப்பட்டுள்ளது.