இந்தியாவின் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்று (01) பிற்பகல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் பெங்களூரில் உள்ள புரூக்ஃபீல்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு குறித்து பெங்களூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிப்புச் சம்பவத்தின் போது உணவகத்தில் அவ்வளவாக மக்கள் இல்லாத காரணத்தினால் பலத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.