சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (02) மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.
9 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய விசாரணையின் பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.