சென்னை அரச மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலை இன்று யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆவணங்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளன.
பூதவுடலை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மூலம், சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்ப்பட்டுள்ளன.
இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.