Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநட்டஈடு கோரி கெஹெலிய மனுத் தாக்கல்

நட்டஈடு கோரி கெஹெலிய மனுத் தாக்கல்

எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி கெஹெலிய ரம்புக்வெல்ல அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக பிரதிவாதிகளிடமிருந்து 100 மில்லியன் ரூபா நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles