கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (25) ஏற்பட்ட நிலைமை தொடர்பில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (26) விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் சிற்றூழியர்களின் சங்கம் உட்பட பல தரப்பினர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நேற்று ஏற்பட்ட விமான தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், அசௌகரியங்களுக்கு உள்ளான பயணிகளிடம் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளது.