Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாதமலைக்கு சென்ற நபர் ஒருவர் உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்கு சென்ற நபர் ஒருவர் உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்கு சென்ற ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.

77 வயதான டபிள்யூ. குணவர்தன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் திடீரென சுகவீனமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவிசாவளை- புவக்பிட்டிய பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு வழிபாட்டிற்காக சென்ற யாத்திரிகர்கள் குழுவொன்று, நேற்று (25) இரவு வழிபாட்டை முடித்து விட்டு திரும்பிய போது குறித்த நபர் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles