அண்மையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் கள நடுவரை விமர்சித்த சம்பவத்துக்காக இலங்கை டி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போட்டியின் பின்னர் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டமைக்காக அவருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் போட்டி கட்டணத்தில் 50 வீதம் அபராதமாக செலுத்த நேரிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தண்டனையால், அவர் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் முதல் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடமாட்டார்.
இதேவேளை, மேற்படி தண்டனைகளுக்கு மேலதிகமாக அவருக்கு பெனால்டி புள்ளிகளை சேர்க்க சர்வதேச கிரிக்கெட் பேரவை செயற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.