யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 615 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 125 கிராம் 992 மில்லி கிராம் ஹெராயின், 162 கிராம் 361 மி.கி ஐஸ், கஞ்சா 01 கிலோ 157 கிராம், மாவா 328 கிராம் 59 மி.கி, தூள் 28 கிராம், மதன மோதகம் 08 கிலோ 10கிராம், 55 மாத்திரைகள், 6,817 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.