Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
வடக்குஇரு குடும்பங்களுக்கு இடையில் வாள்வெட்டு - ஐவர் படுகாயம்

இரு குடும்பங்களுக்கு இடையில் வாள்வெட்டு – ஐவர் படுகாயம்

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் நேற்றிரவு இரு குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார்,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.

மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து வாள், மிளகாய்த்தூள் போன்றவற்றை மீட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles