தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவையில் உள்ள சிற்றூழியர்கள் தொடர்பில் வைத்தியர் பெல்லன தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.