கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு தம்பதியரை ஏற்றிச் சென்ற கார் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (18) இரவு ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இத்தாலிக்கு திரும்புவதற்காக பயணித்த போதே தம்பதியினர் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் 76-78 வயதுடைய இத்தாலிய தம்பதிகள் மற்றும் அனுராதபுரம் பந்துலகமவில் வசிக்கும் 42 வயதான சாரதி என நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.