நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட அதீத போதை போதை காரணைமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 6 மாத கால பகுதிக்கு முன்னர் அவற்றில் இருந்து மீண்டு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு குறித்த இளைஞன் சென்ற போது, நண்பன் போதைப்பொருளை கொடுத்துள்ளார்.
நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து விலகியிருந்த நிலையில், மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால் ஏற்பட்ட அதீத போதை காரணமாக குறித்த இளைஞனின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து, தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.
தாயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்ற போது, அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த இளைஞனின் நண்பனை கைது செய்த காங்கேசன்துறை பொலிஸார், அவர் போதைப்பொருள் பாவித்துள்ளதை உறுதி செய்ததை அடுத்து, அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.