Sunday, May 12, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

மன்னார் – தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் நேற்று மீட்கப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வௌியிடப்பட்டது.

சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக இப் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவௌியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டதுடன், நேற்று காலை 6.15 மணியளவில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு

வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு...

Keep exploring...

Related Articles