Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கை மூலம் மேலும் 759 பேர் கைது

யுக்திய நடவடிக்கை மூலம் மேலும் 759 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 549 சந்தேக நபர்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 210 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுக்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 19 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்களுக்கு திறந்த பிடியாணை பெற்ற 188 பேரும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles