Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் பாலத்தின் மேல் ஒருவர் சடலமாக மீட்பு

ரயில் பாலத்தின் மேல் ஒருவர் சடலமாக மீட்பு

பேருவளை – மங்கொன ரயில் பாலத்தில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (13) காலை புகையிரத பாலத்தில் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் அவர் மோதுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் 75-80 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் பயாகல புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles