Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண் கிராம உத்தியோகத்தரை வன்புணர முயன்ற நபர் கைது

பெண் கிராம உத்தியோகத்தரை வன்புணர முயன்ற நபர் கைது

பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் வன்புணர முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி சந்தேக நபர் தனது வீட்டிற்கு வந்த போது, ​​தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய நிர்வாக கிராம உத்தியோகத்தர் இன்று (12) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles