மூதூர் – தோபூர் பகுதியில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், மனைவியின் ஆடையின் ஒரு பகுதியை பயன்படுத்தி அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.