கொழும்பின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (10) மாலை 5.00 மணி முதல் 11 ஆம் திகதி காலை 8.00 மணி வரை கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.