பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படையணி முகாமிலிருந்து டி – 56 துப்பாக்கிக்குரிய 30 தோட்டக்களுடன் மெகசின் ஒன்று காணமால் போயுள்ளதாக கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த மெகசின் அந்த இராணுவ முகாமின் வடிகாலமைப்பிலிருந்து இன்று (09) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொல்ஹேன்கொட பொலிஸ் படையணி முகாம் வளாகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து 30 தோட்டக்களுடன் இந்த மெகசின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கிருலப்பனை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.