Tuesday, April 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைக்கு அடிமையானவர் எடுத்த விபரீத முடிவு

போதைக்கு அடிமையானவர் எடுத்த விபரீத முடிவு

குருணாகல் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் ஒருவர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் – சுமங்கல மாவத்தையை சேர்ந்த குறித்த நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனைக்கு (ஐஸ் மற்றும் ஹெரோயின்) அடிமையாகியிருந்துள்ளார்.

இந்நிலையில் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அவர் தனது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பிளேட் கத்தியால் வெட்டிக் கொண்டுள்ளார்.

காயமடைந்த நபர் 13 குற்றங்களுக்கான சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles