Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிளிநொச்சியில் தென்னை நார் தொழிற்சாலையொன்று தீக்கிரை

கிளிநொச்சியில் தென்னை நார் தொழிற்சாலையொன்று தீக்கிரை

கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்று நேற்று (07) மாலை தீக்கிரையானது.

இதனால் அங்கிருந்த தென்னை நார் உட்பட பல உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கராச்சி உள்ளூர் சபையின் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் 35 இலட்சம் மதிப்பிலான உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles