தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில், கெஹெலிய ரம்புக்வெல்ல வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டதுடன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.