தற்போது சிறையில் உள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்றுச்சூழல் அமைச்சர் இன்னும் சில நாட்களில் பதவியேற்க உள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற இமியுனோகுளோபின் மருந்தை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி தனுஷ்க ராமநாயக்கவிடம் நாம் வினவியபோது, இந்த இராஜினாமா தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றார்.