Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து 23 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து நீரியல்வள திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டனர்.

பின்னர் 23 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles