அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (02) உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது ரகசியத் தீர்ப்பு, பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று அறிவித்தது.
குறித்த சட்டமூலத்தை எதிர்த்து 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை 06 நாட்களுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
