72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் நேற்றைய தினம் முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
