Monday, May 20, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாவனெல்லையில் 30 கடைகள் தீக்கிரை

மாவனெல்லையில் 30 கடைகள் தீக்கிரை

மாவனெல்ல பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக தற்காலிகமாக கட்டப்பட்ட சில கடைகளில் நேற்று (28) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 30 கடைகள் எரிந்து நாசமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Keep exploring...

Related Articles