குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிறந்து 11 நாட்களில் உயிரிழந்த சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருணாகல் பதில் நீதவான் சட்டத்தரணி ஜயபிரேமா பி. தென்னகோன் குருநாகல் பொலிஸ் தலைமையகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
குறைப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாருக்கும் தெரிவிக்காமல் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிசு உயிரிழந்துள்ளதுடன், இறந்த குழந்தையின் அடையாளத்தை உறுதிப்படுத்த, பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான டி.என்.ஏ பரிசோதனையை நடத்துமாறு பதில் நீதவான் சட்டத்தரணி தென்னகோன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சிசுவின் பெற்றோர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லக் கூடும் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன்இ அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொல்கஹவெல -கொடவெல பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரே இந்த சிசுவின் பெற்றோர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தம்மி அபேசிங்க என்ற யுவதிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், அவர்கள் வழங்கிய முகவரி போலியானது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர்களைக் கைது செய்வதற்காக அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களைக் கண்டறியும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் பதில் நீதவான் பொலிஸாருக்கு உரிய உத்தரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.